Tamil stories Cover Image
Tamil stories Profile Picture
4 Members

பழிக்குப் பழி வாங்குவது ஆளுமைக்கு அழகு அல்ல என்பதைப் பற்றி யோசிப்போம்!

கருப்பின மக்களின் காவலனாய் , கலங்கரை விளக்கமாய் விளங்கிய நெல்சன் மண்டேலா ஜனாதிபதியான பின் முதல்கட்ட பாதுகாப்புப் படையினரோடு உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றிருந்தார்.

அவரவர் விரும்பிய உணவை ஏற்பாடு செய்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

அப்போது மண்டேலா அமர்ந்திருந்த
எதிர் மேசை இருக்கை ஒன்றில்
ஒரு மனிதன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.

உடனே நெல்சன் மண்டேலா
ஒரு படை வீரனை அனுப்பி
அந்த மனிதரை தங்களுடன்
வந்து ஒரே இருக்கையில் அமர்ந்து உணவருந்துமாறு சொன்னார்.

அந்த மனிதரும் வந்து அமர்ந்து உணவருந்தினார்.

பின்னர் அந்த மனிதர் சாப்பிட்டு முடித்தப் பிறகு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அப்போது அங்கிருந்த படைவீரன் ஒருவன் மண்டேலாவைப் பார்த்து அந்த மனிதன் சரியான நோயாளியைப் போல் தெரிகிறான்.

உண்ணும் போது அவரின் கை கால் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன என்று கூறினான்.

அதற்கு மண்டேலா நீ சொல்வது தவறு.

முன்பு நான் சிறையில் இருந்தபோது இந்த மனிதர்தான் சிறை காவலராக இருந்தார்.

என்னை அடிக்கடி அவர் கொடுமைப்படுத்தும் போதெல்லாம்
நான் களைப்பாலும், தாகத்தாலும் குடிக்க தண்ணீர் கேட்பேன்.

அப்போது இந்த மனிதர் என் தலை மீது சிறுநீர் கழித்து விட்டுச் செல்வது வழக்கம்.

தென் ஆப்பிரிக்கா ஜனாதிபதியான என்னை இனம் கண்டு விட்டார்.

நான் இப்போது பதிலுக்குப் பதில் செய்வேன் என்று நடுங்கியிருப்பார் எனக் கூறினார்.

ஆனால் பழி வாங்குவது என்னுடைய பழக்கம் இல்லை.

பழிவாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதனையோ கட்டி எழுப்பாது.

அதேநேரம் சில நேரங்களில் சில காரியங்களுக்காக மனதில் தோன்றும் சகிப்புத்தன்மை பெரிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கும் என்றார் நெல்சன் மண்டேலா.

இவர்கள்தான் போற்றுதற்குரிய தலைவர்களாக மாறுகிறார்கள்.

'இன்னாச் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்'

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry

சில நேரங்களில் பிறர் சொல்வதை காதால் கேட்கக் கூடாது என்பதை சிறுகதை மூலம் சிந்திப்போம்!

மூன்று தவளைகள் சேர்ந்து இமய மலையை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏறுவதற்கு தயாராகின.

அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர்

'இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் தடுக்கி விழுந்தால் அவ்வளவுதான்' என்றார்.

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்திவிட்டது.

சிறுது நேரம் சென்றவுடன் இன்னொருவர்

'மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் உயிருக்கு ஆபத்து' என்று சொன்னார். உடனே இரண்டாவது தவளையும் ஏறுவதை நிறுத்தி விட்டது.

ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் ஏறிய வேகத்தில் மலை உச்சியை அடைந்தது.

பின்னர் வெற்றியோடு கீழே இறங்கிய தவளையிடம் எல்லோரும் பயமுறுத்தியும் உன்னால் மட்டும் எப்படி மலையுச்சியை அடைய முடிந்தது? என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தத் தவளை சில வேளைகளில் சில மனிதர்கள் சொல்லும் எதிர்மறைச் சிந்தனைகளை நான் காதில் வாங்க மாட்டேன் என்றது.

நாம் இந்த தவளையைப் போல

*தேவையற்ற சிந்தனைகளை காதில் வாங்காமல்.*

*நாளும் நாம் நல்ல பாதையில் முன்னேறிச் செல்வோம்.*

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry

*அனைத்தையும் சுமக்காதே !*

ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர்.

மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், "என்னாயிற்று பெண்ணே?

ஏதேனும் உதவி தேவையா?"என்று கேட்டார்.

பதிலுக்கு அந்தப் பெண், "நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன்.

ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது.

நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்" என்று கூறி வருந்தினாள்.

"கவலைப்படாதே,

என் தோள்களின் மீது ஏறிக்கொள்.
நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்" என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது.

''ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?''

என்று கேட்க, அதற்கு அவர்

''நாம் ஒரு துறவி என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்?

இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

உதவி செய்த துறவி,

"தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன்,

நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம்.

எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால் ,

வாழ்வு என்றென்றும் ஆனந்தமே

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry

கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது.

எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர்.

அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது எழிலே தான்.

ஒரு மாலை நேரத்தில்,
தன் வீட்டு வாசலில் உட்கார்ந்
திருந்தார் அந்த விவசாயி.

அவரைத் தேடிக்
கொண்டு ஒருவர் வந்தார்.

வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும், கசங்கிய ஆடைகளுமே உணர்த்தின.

வந்தவர், வணக்கம் சொன்னார்.

விவசாயி, அவர் அமர்வதற்கு
ஒரு நாற்காலியைக் கொண்டு
வந்து போட்டார்.

அவர் உட்கார்ந்ததும், சூடாக டீ குடிக்கி
றீங்களா ?
என்று கேட்டார்.
வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார்.

சொல்லுங்க, என்ன
விஷயம் ?' விவசாயி கேட்டார்.

ஒண்ணுமில்லை.
நான் கோபி முல்லங் கரையிலிருந்து வர்றேன்.

இது எனக்குப் பழக்கமில்லாத பாதை.

வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு.

அதை வெளியே எடுக்கணும்.

உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க.

அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்றும் சொன்னாங்க.

அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று...

ரொம்பப் பெரிய காரா ?' என்று கேட்டார் விவசாயி.

இல்லை, இல்லை.
சின்ன கார் தான்' என்றார் வந்தவர்.

விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்
களை எடுத்துக்கொண்டார்.

குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடியே அவருடன் சென்றார்.

விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம்,
அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்.

கார் சிறியதாகத்தான் இருந்தது.

ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில்,

ஒரு வேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.

விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி,

குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகவேப் பிணைத்தார்.

கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

பிறகு, எங்கடா பழனி..

இழு பார்ப்போம் ! என்று சத்தமாகவேக் குரல் கொடுத்தார்.

குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.

ஏண்டா கந்தா இழுடா ராஜா !
இன்னும் சத்தமாகவேச் சொன்னார் விவசாயி.

குதிரை துளிகூட நகரவே இல்லை.

டேய் முருகா... வேகமா இழு !

மறுபடியும் உரத்த குரலில் சொன்னார்.

மீண்டும் குதிரை ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை.

என் செல்லம்.. என் தங்கம்... எழிலூ..
நீயும் சேர்ந்தே இழுடா !
என்றார்.

அவ்வளவு
தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடமே,

கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரரோ, விவசாயிக்கு நன்றி சொன்னார்.

ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்க ?

அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை.

ஐயா, என் எழிலுக்கு ரெண்டு கண்ணுமே தெரியாது.

தான் மட்டும் தான் இந்த கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா ?

அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன்.

அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு.

சரசரவென காரை வெளியே இழுத்துடுச்சு !

அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை.

ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்
பவையோ மிக ஏராளம்,

இதையே பிரெஞ்ச் கணிதவியலாளரும், தத்துவவியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் மிக(Blaise Pascal) அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது.

அதனால் தான்
நல்ல நல்ல சொற்களைப்
பேச வாய்ப்பு இருக்கும்போது,..

கடுஞ்சொற்களை
ஏன் பேச வேண்டும் என்பதையே *கனியிருப்பக் காய் கவர்ந்தற்று* என்கிறார் வள்ளுவரும்...

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry

அது ஒரு பெரிய மைதானம். அங்கே மூன்று பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார்.

பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது.

சாமியார் அவர்களைக் கேட்டார். ‘கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா?’

‘ஆமா சாமி!’

‘எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?’

முதல் பையன் சொன்னான். ‘நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்படவேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிடலாம்!’

இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘நீ பெரிய பயில்வானா வருவே’ என்று அவனை ஆசிர்வதித்தார். அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’

’ஜாலியா விளையாடினாதான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிகிட்டு உட்கார்ந்து படிச்சா எல்லாம் சட்டுன்னு புத்தியில ஏறும்!’

‘பிரமாதம். நீ பெரிய படிப்பாளியா வருவே’ என்று இரண்டாவது பையனை ஆசிர்வதித்தார் சாமியார். பிறகு மூன்றாவது பையனையும் அதே கேள்வியைக் கேட்டார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’

அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். ‘எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடறேன்!’

சாமியார் அவனை வணங்கினார். ‘இனிமே நீதான் என்னோட குரு!’

ஒவ்வொன்றுக்கும் காரணம், பின்விளைவுகள், லாப நஷ்டங்களையெல்லாம் யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள்.
மிகுந்த மகிழ்ச்சியுடன்.

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry