82 வயதில் மீண்டும் தொகுப்பாளராகும் அமிதாப் பச்சன்!

1 week ago 12

கனவுகளை உயிர்ப்புடன் வையுங்கள்

வதந்திகளுக்கு விடியோ மூலம் பதிலளித்துள்ள அமிதாப் பச்சன் பேசியதாவது:

ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு மீண்டும் ரசிகர்களிடம் அன்பு, இணக்கம், அனைவரது கண்களிலும் வெதுவெதுப்பான பார்வை கிடைக்குமா என யோசிப்பேன். அந்த ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் எனக்கு நான் எதிர் பார்த்ததைவிட அதிகமாகவே கிடைக்கும். தொடர்ச்சியாக இது எனக்கு வந்துகொண்டே இருக்கிறது. நமது நம்பிக்கை, இந்த ஆசை எப்போதும் இதேமாதிரி பிரகாசம் குறையாமல் இருக்க வேண்டும்.

பிரியாவிடை அளிக்கும் தருவாயில் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். நமது முயற்சிகள் யாராவது ஒருவரது வாழ்க்கையத் தொட்டால் அல்லது இங்கு பேசப்படும் வார்த்தை யாருக்காவது நம்பிக்கையை தந்திருந்தால் நமது 25ஆவது ஆண்டு பயணத்துக்கு உண்மையான வெற்றியாக கருதுகிறேன்.

அதனால், பெண்கள், ஆண்களே நான் உங்களை அடுத்த சீசனில் சந்திக்கிறேன். உங்களது கடின உழைப்புகளில் நம்பிக்கையை வையுங்கள். உங்களது கனவுகளை உயிர்ப்புடன் வையுங்கள். நிறுத்தாதீர்கள், மண்டியிடாதீர்கள். நீங்கள் எனக்கு மதிப்பு மிக்கவர்கள். மீண்டும் உங்களை சந்திக்கும் வரை நான் உங்கள் அமிதாப் பச்சன். இந்த சீசனின் எனது கடைசி வார்த்தையாக ஒன்றைச் சொல்லிக்கொண்டு முடிக்கிறேன் - ‘ சுப ராத்திரி'.

Read Entire Article