Last Updated : 11 Jan, 2025 05:09 AM
Published : 11 Jan 2025 05:09 AM
Last Updated : 11 Jan 2025 05:09 AM
இமாச்சல பிரதேசத்தில் ரூ.210 கோடிக்கு மேல் மின்சார கட்டணம் வந்திருப்பதை கண்டு தொழிலதிபர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டம், பெகர்வின் ஜட்டன் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் லலித் திமான். இவருக்கு 2024 டிசம்பருக்கான மின்சார கட்டணமாக ரூ.210 கோடியே 42 லட்சத்து 8,405-க்கு அண்மையில் ரசீது வந்தது. அதற்கு முந்தைய மாத மின்சார கட்டணமாக அவர் ரூ.2,500 மட்டுமே செலுத்தியிருந்தார். இந்நிலையில் டிசம்பருக்கான கட்டணத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து திமான், மின் வாரிய அலுவலகம் சென்று புகார் அளித்தார். அப்போது அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கூறினர். பிறகு மின்சார கட்டணத்தை ரூ.4,047 ஆக குறைத்தனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் குஜராத் மாநிலம், வல்சாத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்கு அன்சாரி என்ற தையல்காரருக்கு ரூ.86.41 லட்சம் மின்சார கட்டணம் வந்தது. அவரது கடைக்கு அரசுக்கு சொந்தமான 'தக் ஷின் குஜராத் விஜ் கம்பெனி' மின்சாரம் அளிக்கிறது.
இந்த நிறுவனம் தெற்கு குஜராத்தில் 7 மாவட்டங்களில் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட நுகர்வோரை கொண்டுள்ளது. அன்சாரி அந்தப் பெரிய தொகை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் மின்சார ரீடிங் எடுத்தவர் தவறுதலாக 1,0 ஆகிய 2 இலக்கங்களை கூடுதலாக சேர்த்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மின்சார கட்டணம் ரூ.1,540 ஆக சரி செய்யப்பட்டது.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
FollowFOLLOW US
தவறவிடாதீர்!
- போதைப் பொருள் பற்றி தகவல் கூறிய 970 பேருக்கு குஜராத்தில் ரூ.11 கோடி பரிசு
- தமிழகத்திற்கு ரூ.7,058 கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு
- இந்தியாவில் வரி விதிப்பு அதிகம்: தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க அசோசேம் வலியுறுத்தல்
- காட்டுத் தீயில் பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்: இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 4 லட்சம் பேர் வெளியேற்றம்
Sign up to receive our newsletter in your inbox every day!