மாமியாரிடம் மருமகள் கேட்கக் கூடாத 5 கேள்விகள்!

2 weeks ago 10

Last Updated:December 28, 2024 12:49 PM IST

சில சமயங்களில் மருமகள் தன் மாமியாரிடம் பேசும் சில வார்த்தைகள் உங்கள் உறவைக் கெடுக்கும். அப்படியிருக்க மருமகள் தன் மாமியாரிடம் சொல்லவே கூடாத வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

News18

மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான உறவு ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் நாம் செய்யும் சில விஷயங்கள் இந்த உறவைக் கெடுக்கும். மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும், மரியாதை செய்வதும் மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் மருமகள் தன் மாமியாரிடம் பேசும் சில வார்த்தைகள் உங்கள் உறவைக் கெடுக்கும். அப்படியிருக்க மருமகள் தன் மாமியாரிடம் சொல்லவே கூடாத வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

மாமியாரிடம் என்ன வார்த்தைகளை சொல்லக்கூடாது?

1. உங்கள் மகனுக்கு என்ன கற்றுக் கொடுத்தீர்கள்?

உங்கள் மகனுக்கு என்ன கற்றுக் கொடுத்தீர்கள்? என்று சொன்னால் உங்கள் மாமியார் மனம் புண்படலாம். இப்படி சொல்வது உங்கள் மாமியார் தனது மகனை சரியாக வளர்க்கவில்லை என்று கூறுவதுபோல் தெரிகிறது. இது உங்கள் உறவில் இடைவெளியை அதிகரிக்கலாம். எனவே, உங்கள் மாமியாரிடம் இப்படி கூறுவதை தவிர்க்க வேண்டும்.

2. உங்களுக்காக நாங்கள் சண்டை போடுகிறோம்

உங்களுக்காக நாங்கள் சண்டை போடுகிறோம் என்று சொல்வது, உங்கள் மாமியாரை நேரடியாக குற்றம் சாட்டுவதுபோல் தெரிகிறது. அதாவது உங்கள் திருமணத்திற்குப் பிறகு உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் நடக்கும் அனைத்து சண்டைகளுக்கும் உங்கள் மாமியார் மட்டுமே காரணம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இப்படி உங்கள் மாமியாரிடம் கூறுவது தவறு.

3. உங்களைவிட உங்கள் மகனை நான் நன்கு அறிவேன்

உங்களைவிட உங்கள் மகனை நான் நன்கு அறிவேன் என்று கூறுவது உங்கள் மாமியாரின் அனுபவத்தையும், கருத்தையும் அவமதிப்பதுபோல் தெரிகிறது. இது உங்கள் மாமியாரை காயப்படுத்தலாம் மற்றும் உங்கள் மீது கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே, இப்படி உங்கள் மாமியாரிடம் கூறுவதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்க: சர்க்கரை நோய்க்கு மிகப்பெரிய எதிரி இந்த செடிதான்! பெயர் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...! 

4. என் குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள முடியும்

என் குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள முடியும் என்று கூறுவது உங்கள் மாமியாரின் உதவியை நீங்கள் மறுப்பதுபோல் தெரிகிறது. இது உங்கள் மாமியாரை கோபப்படுத்தலாம் மற்றும் தான் மதிப்பற்றவள் போல் தெரிவதாகவும் அவர்கள் உணரலாம். எனவே, இப்படி உங்கள் உங்கள் மாமியாரிடம் கூறுவதை தவிர்க்கவும்.

5. நீங்கள் என் தவறுகளை மட்டுமே பார்க்கிறீர்கள்

நீங்கள் என் தவறுகளை மட்டுமே பார்க்கிறீர்கள் என்று கூறுவது, உங்கள் மாமியார் உங்கள் தவறுகளை மட்டுமே எப்போதும் பார்க்கிறார் என்று கூறுவதுபோல் தெரிகிறது. இது உங்கள் உறவில் கசப்பை ஏற்படுத்தும். எனவே, இப்படி உங்கள் மாமியாரிடம் கூறுவதை தவிர்க்கவும்.

இதையும் படிக்க: கூர்மையான மூளை வேண்டுமா...? தினசரி இதை செய்தால் போதும்...!

உங்கள் உறவுகளை எப்படி வலுப்படுத்துவது?

  • உங்கள் மாமியாரின் நல்ல குணங்களை உணர்ந்து பாராட்டுங்கள்.
  • உங்கள் உணர்வுகளை நேர்மையாகவும், மரியாதையுடன் வெளிப்படுத்துங்கள்.
  • உங்கள் மாமியாருடன் சேர்ந்து எந்த பிரச்சனையையும் தீர்க்க முயற்சி செய்யுங்கள். மேலும், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.
  • உங்கள் உறவை வலுப்படுத்த பொறுமையாக இருங்கள்.

மாமியார் மற்றும் மருமகள் உறவை அன்பு, புரிதல் மற்றும் மரியாதை ஆகியவற்றுடன் பலப்படுத்தலாம், மேற்கூறிய இந்த சிறிய விஷயங்களை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும்.

First Published :

December 28, 2024 12:49 PM IST

Read Entire Article